Wednesday, February 12, 2014

நாடு தழுவிய மாபெரும் வேலைநிறுத்தம்! வெற்றி!

நாடு தழுவிய மாபெரும் வேலைநிறுத்தம்!வெற்றி!

       புதிய பென்ஷன் திட்டம் ரத்து,50% அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைப்பு உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் சுமார் 12 லட்சம்  மத்திய அரசு ஊழியர்களும், மாநில அளவில் சுமார் 1.5 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில்  கலந்து கொண்டனர். கடலூர் கோட்டத்தில் வரலாறு காணாத அளவில் மிக பெருவாரியான தோழர்கள் கலந்து கொண்டு வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்தனர்.அவர்களுக்கு நம் புரட்சி கலந்த வாழ்த்துக்களும், வணக்கமும் உரித்தாகட்டும்!. அதன் ஒரு பகுதியாக கடலூர் கோட்ட JCA சார்பாக 12-02-2014 அன்று சிதம்பரம் தலைமை அஞ்சலகத்தில் மாபெரும் வேலை நிறுத்த கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் காட்சிகள் சில:-
தேசிய அஞ்சல் ஊழியர் சங்கம்,மூன்று கடலூர் கோட்டத்தின் உதவி செயலர்
தோ.B .செந்தில் குமார் அவர்கள் உரைஆற்றுகிறார்கள்.

அனைத்திந்திய  அஞ்சல் ஊழியர் சங்கம்,நான்கு  கடலூர் கோட்டத்தின் 
உதவி செயலர் 
தோ.தில்லை வேலன்  அவர்கள் உரைஆற்றுகிறார்கள்.

அனைத்திந்திய  அஞ்சல் ஊழியர் சங்கம்,மூன்று   கடலூர் கோட்டத்தின் செயலர் (Elected )
 தோ.P  .ரவி அவர்கள் ஆர்பாட்ட உரைஆற்றுகிறார்கள். 

வேலை நிறுத்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட தோழர்கள்!


No comments:

Post a Comment