Saturday, January 30, 2016

EXECUTIVE MEETING OF OUR UNION 31.01.2016

Dear Comrades,
        All the Office bearers of our union are hereby requested to attend our divisional union executive meeting which will going to held on 31.01.2016 without fail.
             
                 Subjects:- 
1. Postal House @ cuddalore - reg
2. Election of Auditor of our divisional union
3. Other issues with the permission of the chair.

Venue:- Cuddalore Head Post Office,Cuddalore,607001.
Date: 31.01.2016
Time: 02.30PM Onwards
    
          And all the Executive members also should attend the meeting without fail.
And all the members of our divisional union may attend the meeting and share their views and valuable suggestiong regarding the above mentioned subject and make the meeting as grand success.


With regards,
Divisional secretary,
AIPEUP3 Cuddalore division,
@ Chidambaram - 608001.

Tuesday, January 26, 2016

மாநில சங்க மாபெரும் வெற்றி




நமது மாநிலசங்கத்தின் விடா முயற்சியால் நமக்கு    BUSSINESS HOURS மாற்றப்பட்டுள்ளது  உத்திரவு நகல் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது 

மாநில செயலரும் அகில இந்திய தலைவருமான  தோழர்  JR மற்றும் அகில இந்திய செயலர் பராசர்  அவர்களுக்கும் கோட்ட சங்கம் நன்றியை தெரிவித்துகொள்கிறது


Counter Timings For Post Offices

Transactions
Working of Counter as per Directorate Clarification Orders issued on 07.01.2016
    1.       References ,Enquiries , Sale of Postage Stamps and Stationery items
      8 Hours
      Entire Working Hours of           the Office
    2.       Registration ( Letters, Parcels including VP, Insured Items )

              REGULAR DAYS
             



              SATURDAYS



      6 hours
    (One counter 7 hours if there      are two MPCM Counters )


      
     5 hours
    3.  Registration 
       ( Letters, Parcels including 
         VP, Insured Items )

     SATURDAYS

      


      5 Hours 
     ( Stopping at 3.00 PM)
    4.  Money Orders ( Including          IMO, MMRS,IMT)
    5.  Sale & Payment of IPOs
    6.  ePayment Transactions

       REGULAR DAYS
       SATURDAYS






           5   Hours
  3   Hours

    7. SAVINGS BANK 
        AND 
      SAVINGS  CERTIFICATES..

            
       REGULAR DAYS
       SATURDAYS

            




        5 Hours
        3 Hours  
        ( Stopping at 1.00 PM)



Thursday, January 14, 2016

சுற்றறிக்கை எண் 04 dt 13.01.2016




NFPE
அனைத்திந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் – குரூப் “C
கடலூர் கோட்டம் – கடலூர் -607001.

சுற்றறிக்கை எண் 04                                                                              தேதி : 13.01.2016
P.RAVI, PRESIDENT                                                                             R.JAYAKUMAR, FINANCIAL
9842499049                                                TREASURER 9943661838

அன்பார்ந்த தோழர்களே!  தோழியர்களே! அன்பு வணக்கம்.
அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை சங்கம் தெருவித்து கொள்கிறது.
                இந்த இனிய புத்தாண்டின் துவக்கத்தில், இந்த சுற்றறிக்கை  மூலம், சங்க செய்திகளை பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.. நமது கோட்டத்தில்  IPO © ஆக  பணியில் சேர்ந்து பிறகு ASP ஆக தற்போது SPO  ஆக திரு. S. சிவப்பிரகாசம் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டதில் நமக்கு மகிழ்ச்சி. ஊழியர்  நலனில் அதிக அக்கறை எடுத்துகொள்வார் , அதே சமயத்தில் அவவர்களுக்குரிய பணியை செவ்வனே செய்யவேண்டும் என்றும் எதிர்பார்ப்பவர்.  சட்டப்படி கிடைக்கவேண்டிய உரிமைகைளை சங்க, ஜாதி, பாகுபாடில்லாமல் செய்வார். அவர் பணி நமது கோட்டத்தில் சிறந்து விளங்கிட நமது சங்கம்  வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது

உறுப்பினர்கள் அனைவரும் தவறமல் நமது சங்க வெப்சைட் பார்க்கவும்
Tamilnadu circle= aipeup3tn.blogspot        Cuddalore division= aipeup3 cuddalore.blogspot
தொடர்புக்கு; email- aipeup3cuddalore@gmail.com, 

அன்பார்ந்த தோழர்களே!  தோழியர்களே!
     உற்பத்தித்திறன் அதிகரிக்க வேண்டும், மக்கள் நலன் பாதுகாக்க வேண்டும்  என கருதி தினசரி வேலை நேரத்தை  6 மணி நேரமாக  குறைக்க பல அயல்நாடுகள் திட்டமிட்டிருக்கும் வேளையில், நாம் 8 மணி நேரம் போய் 10/12 மணி நேரம் பணி  செய்யவேண்டிய சூழ்நிலையிலும்  கூட, நவீன தொழில் நுட்பமான  CBS ஆன போதிலும் அதை கடமையென ஏற்று  அதனை அறிந்தும்/அறியாமலும் கூட மற்றவர்களை கேட்டு பணி செய்யும் சூழலிலும்  கூட, தொல்லை தரும் பிரிண்டர் , தொய்வில்லா  மின்சாரம் (UPS) வசதி இல்லாத போதும் கூட, NET WORK PROBLEM அடிக்கடி இருந்தும் கூட நமது பணியினை மன உளைச்சலோடு  நாளடைவில் சரியாகிவிடும் (அல்லது பழகிவிடும்) என்ற நம்பிக்கையில் பணி  செய்து கொண்டிருக்கிறோம்.




                SANCHAY POST SOFTWARE இல் பணி  செய்யும் போது  நாம் ஒரே நாளில் பல கணக்குகளை துவங்கி நமது நிர்வாகம் கொடுத்த இலக்கை எட்டினோம் அதே நிலமை தற்போது இல்லை என்பதை நாமும் அறிவோம் நிர்வாகமும் அறியும். ஒரு கணக்கு துவங்கி, அதனை ஒரே நபர் VERIFICATION செய்ய பல நிமிடங்கள் ஆகும் போது, ஒரே நாளில் பல கணக்குகள் துவங்க சொல்லி SPM\PA க்களின் பணி  நேரத்தை அதிகரித்து மன உளைச்சலையும் கொடுப்பது நியாமில்லை. பல 1+1 அலுவகங்கள் CBS ஆன பிறகும் கூட PA  இல்லாமல் இருப்பது வேலை  பணி  நேரத்தை அதிகரித்து மன உளைச்சலையும் கொடுக்கிறது எனவே நிர்வாகம் உடனே தக்க நடவடிக்கை எடுக்க கேட்டுகொள்கிறோம்.

                     அன்பார்ந்த தோழர்களே தோழியர்களே நமது கோட்ட செயற்குழு கூட்டம் வரும் 31.01.2016 தேதி கடலூர் தலைமை தபால் நிலைய வளாகத்தில் மாலை 3.00 மணிக்கு துவங்கி நடைபெறும் என்பதை தெரிவித்து கொள்கிறேன். அதுசமயம் செயற்குழு உறுப்பினர்கள் மட்டுமல்லாமல் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் அதுமட்டுமல்லாமல்  இந்த செயற்குழு கூட்டம் நமது முக்கியமான பிரச்சனையான, நமது சொத்தான நமது சங்க கட்டிடத்தினை எப்படி பராமரிப்பது அதற்கான வழிகள் பற்றிய ஆலோசனைகள் தேவை படுவதால் நமது சங்கத்தின் முன்னோடிகளுக்கும் தெரியபடுத்தி, அவர்களையும் அழைத்து வரவேண்டுமாய் கேட்டுகொள்கிறேன்.

     DECEMBER மாத மாதாந்திர பேட்டி நமது கோட்ட நிர்வாகத்தால் நடத்தப்படவில்லை வரும் JANUARY 2016  மாதாந்திர பேட்டி நடைபெறும் என நம்புகிறோம் எனவே  தங்களது  பிரட்சினைகளை வரும் 20.01.2016 க்குள்  கோட்ட செயலரிடம்    e mail, or cell phone (aipeup3cuddalor@gmail.com and chinnadeeran@gmail.com) (9486457474) மூலமாக  தெரிவிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் , மற்றும்  அந்தந்த பகுதி பொறுப்பாளர்கள் நமது உறுப்பினர்களை தொடர்புகொண்டு பிரச்சனைகளை கேட்டறிந்து செயலருக்கு தெரிவிக்க  வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்



தோழமையுள்ள
                                                          CPJ.கென்னடி (எ) அறிவரசு  C
சிதம்பரம்                                                           கோட்ட செயலர் 9486457474


Wednesday, January 13, 2016

பொங்கல் வாழ்த்துக்கள்

அனைத்து அஞ்சல் குடும்பங்களுக்கும்இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை  தெருவித்துகொள்கிறது . 

பொங்கலோ பொங்கல்

AIPEU P3  CUDDALORE DIVISION

பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!


Monday, January 4, 2016

Relief materials to Kandiyamedu village,near vallampadugai by our NFPE Comrades

கோட்ட  தலைவர் P ரவி மற்றும் கோட்ட செயலாளர் C அறிவரசு அவர்கள் 

திரண்டிருந்த மக்கள் கூட்டத்தின்  ஒரு பகுதி!

உதவி செயலர் தோ.P தாமோதரன் மற்றும் கோட்ட செயலாளர் தோ.C அறிவரசு அவர்கள்!




Friday, January 1, 2016

வெள்ள நிவாரணம் முன் பணம்

தோழர்களே  தோழியர்களே வணக்கம்

வெள்ள நிவாரணம்  கிடைக்க வாய்ப்பு
மற்றும்
நமது அஞ்சல் கூட்டுறவு சங்கத்தின்  உறுப்பினர்களுக்கு  வெள்ள நிவாரண முன் பணமாக  ரூ 30000.00  வழங்கபடுவதாக செய்தி வந்துள்ளது.  இதற்கு வட்டி உண்டு  விண்ணப்பம் வேண்டுவோர்  தொடர்பு கொள்ளவும்

கென்னெடி (எ) அறிவரசு
செயலர்
கடலூர் கோட்டம்

வரும் 2016 ஆம் ஆண்டு அனைவருக்கும் இனிதாக அமையட்டும்

வரும் 2016 ஆம் ஆண்டு  அனைவருக்கும்  இனிதாக  அமையட்டும்! ஏற்றங்களைக் கொடுக்கட்டும்! ஏமாற்றங்கள் தூக்கி  எறியப்படட்டும் ! வெற்றிகளை நோக்கி  நாம் முன்னேறுவோம் !  

வாழ்த்துக்களுடன் ==

STATE GOVT DECLARED THE STATE OF TAMILNADU AS FLOOD AFFECTED ; G.O. ISSUED - FOR GDS ALREADY APPLICATIONS CALLED - PL SEE THE ORDERS


புத்தாண்டுப்  பரிசு !  வெள்ள  முன்பணம்   
மற்றும்  உதவித்தொகை !

அன்புத் தோழர்களே  வணக்கம் !  ஏற்கனவே வெள்ள  முன்பணம் வழங்கிட அந்தந்த கோட்ட அதிகாரிகளுக்கு  CPMG  அவர்கள்  அளித்த உத்திரவின் நகல்   நமது  வலைத்தளத்தில் பிரசுரித்திருந்தோம். அதன் நகலை மீண்டும் இதன் கீழே   தருகிறோம்.  அதில் மாநில அரசு வெள்ளம் பாதித்த பகுதி என அரசாணை  வெளியிட்டிருப்பின்  இந்த  வெள்ள  முன் பணம் ரூ.7500/- விண்ணப்பித்த  ஊழியர்களுக்கு  வழங்கலாம் என்று அளிக்கப்பட்டிருந்தது.

மேலும் உரிய விண்ணப்பமும் அவர்களின் பொருட்கள் பாதிக்கப் பட்டதற்கான REVENUE AUTHORITY  CERTIFICATE உடன் அனுப்பப் பட்டால் WELFARE  FUND  இல்  இருந்து  GDS  ஊழியர்களுக்கு ரூ. 5000/- உதவித் தொகை வழங்கப்படும்  என்று  அடுத்த  நிலை  அதிகாரிகளுக்கு  உத்திரவிடப்பட்டிருந்தது . 

இது  குறித்து  மாநில  அரசினால்  தற்போது  அரசாணை  வெளியிடப் பட்டுள்ளது. அதில் மாநிலம்  முழுதும்  வெள்ளம்  பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் நகல்  CPMG  அவர்களுக்கும்  நம்மால்   தற்போது அளிக்கப் பட்டுள்ளது.

இதன் மீது உரிய உடன் உரிய நடவடிக்கை கோரியுள்ளோம்.  மேலும் ஏற்கனவே இதன் மீது  STANDING  ORDER  CPMG அவர்களால்  கொடுக்கப் பட்டுள்ளதால் ,  அந்தந்த  கோட்ட அதிகாரிகளை அணுகி வெள்ள முன்பணம்  பெற  கோட்ட /கிளைச் செயலர்கள் விரைந்து செயலாற்றிட  வேண்டுகிறோம் ! அனைத்தும்  கீழே  உங்கள் உடனடி உபயோகத்திற்காக அளிக்கப் பட்டுள்ளது.

Payment Of Bonus (Amendment) Bill 2015



updated
secretary cuddalore dn